Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து கட்டணம் உயர்வு! – கேரள அரசு ஒப்புதல்!

Webdunia
வியாழன், 14 மே 2020 (16:16 IST)
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக குறைவான பயணிகளே பேருந்தில் அனுமதிக்கப்படுவதால் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கு கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஊரடங்கு மே 17 உடன் முடிவடைய உள்ள நிலையில் மாநில அரசுகள் மேற்கொண்டு செய்யவேண்டிய நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றது. கேரளாவில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக 38 பேர் பயணிக்க கூடிய பேருந்துகளில் 19 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று பேர் இருக்கையில் இருவரும், இரண்டு பேர் இருக்கையில் ஒருவரும் அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நின்று செல்ல அனுமதி இல்லை.

இதனால் கேரளா அரசு போக்குவரத்து கழகத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதால் அதனை ஈடுகட்டும் விதமாக டிக்கெட் கட்டணங்களை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா முழுவதுமாக கட்டுக்குள் வரும் வரை இந்த டிக்கெட் உயர்வு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments