Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்ட விரோதமாக யானை வளர்த்த கேரள முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2015 (02:15 IST)
சட்ட விரோதமாக யானை வளர்த்த கேரள முன்னாள் அமைச்சர் கணேஷ்குமார் மீது கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 

 
மலையாள சினிமா நடிகரான இருந்த கணேஷ் குமார், தற்போது பத்தானாபுரம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த 1994ஆம் ஆண்டு கோயிலுக்கு காணிக்கையாகச் செலுத்த 7 வயது யானையை, வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.
 
ஆனால், அந்த யானையை கோயிலில் விடாமல் சுமார் 20 ஆண்டுகளாக வீட்டில் வளர்த்துள்ளார். மேலும், கோயில் திருவிழா, திருமணம் போன்ற காலங்களில் யானையை வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதித்தார் எனப் பரபரப்புப் புகார்கள் எழுந்தன.
 
இதனால், இவர் மீது பிராணிகள் வதை தடுப்புச் சங்க நிர்வாகிகள், கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டிக்குப் புகார் அனுப்பினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இந்நிலையில், சட்ட விரோதமாகக் கணேஷ் குமார் தனது வீட்டில் யானையை வளர்த்து வருவதாகத் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் சசிதரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் கணேஷ் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஜான் இலிகாடன் நோட்டீஸ் அனுப்பினார்.
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments