Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா வெள்ளத்திற்கு காங்கிரஸ் கட்சியே காரணம்: சுற்றுச்சூழல் நிபுணர் கருத்து

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (20:55 IST)
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பேய்மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.
 
இந்த நிலையில் கேரளாவின் இந்த பெரும் சேதத்திற்கு கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியே காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில் என்பவர் கூறியுள்ளார்.
 
பேராசிரியரான மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழு ஒன்று பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கடந்த 2010ஆம் ஆண்டு ஆய்வு செய்தது. 2011ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கையில் உடனடியாக கேரளாவில் மலைப்பகுதிகளில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், மணல் குவாரிகள், சுரங்க பணிகளை உடனடியாக தடைசெய்யவேண்டும் என்றூம் காடுகள் அழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. ஆனால் இந்த ஆய்வின் அறிக்கையை அன்றைய காங்கிரஸ் அரசு அலட்சியம் செய்தத்தால் தான் இன்று இவ்வளவு பெரிய சேதாரங்களை சந்திக்க வேண்டியதுள்ள்தாக மாதவ் காட்கில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments