Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் ராட்சத எரிகல் விழுந்ததாகத் தகவல்: பேரிடர் தடுப்பு துறையினர் விரைந்தனர்

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (16:51 IST)
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அம்மாநில இயற்கை பேரிடர் தடுப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
 
கேரள மாநிலத்திரலுள்ள திரிச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களின் வான்வெளியில் மிகப்பெரிய எரிகோளம் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் பீதியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
மேலும்,  அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றதாகவும், அப்போது அங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் கிராமத்தில் ராட்சத எரிகல் விழுந்ததைப் போல மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, சுற்றுப்புற தரைப்பகுதி கருகிப்போய் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து, கேரள மாநில இயற்கை பேரிடர் தடுப்பு துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
 
இது குறித்து ஆய்வு மேற்கொண்டப்பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Show comments