Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க கடைக்கு வந்து கொரோனா வந்துட்டா பரிசு! – சலுகை போட்ட கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (12:55 IST)
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் பதட்டத்தில் உள்ள நிலையில் தங்கள் கடைக்கு வருபவர்களுக்கு கொரோனா வந்தால் பரிசு வழங்கப்படும் என அறிவித்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வரும் நிலையில் விற்பனையை அதிகரிக்க பலர் நூதனமான விளம்பரங்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடை ஒன்று விளம்பரம் ஒன்றை செய்துள்ளது.

தங்கள் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடியதால் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து ஒருவர் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையை சீல் வைத்துள்ளனர். மேலும் கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments