Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி விருந்தினர்களுக்கு பல்புதான்: கேரளா தீர்மானம்

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (17:26 IST)
அரசு விழாக்களில் கலந்துக்கொள்ளும் விருந்தினர்களுக்கு, பூங்கொத்துகளுக்கு பதில் எல்.இ.டி. பல்புகளை வழங்க கேரளா மின்சார வாரியம் தீர்மானித்துள்ளது.


 

 
வெப்பத்தையும், மின்சார செலவினங்களையும் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
 
இந்நிலையில் கேரளா மின்சாரத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் விருந்தினர்களுக்கு இனி எல்.இ.டி பல்புகளை நினைவு பாரிசாக வழங்க முடிவு செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
 
அதாவது, மாநிலத்தில் மின்சார வாரியம் தொடர்பான விழாக்களில் கலந்துக்கொள்ளும் விருந்தினர்களுக்கு, பூங்கொத்துகளுக்கு பதில் எல்.இ.டி. பல்புகளை வழங்க கேரளா மின்சார வாரியம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments