Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளுடன் பிரபல நடிகர், மாடல் அழகிகள் கைது

ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளுடன் பிரபல நடிகர், மாடல் அழகிகள் கைது
, ஞாயிறு, 1 பிப்ரவரி 2015 (09:39 IST)
கேரள மாநிலத்தில் பிரபல மலையாள நடிகர், பெண் துணை இயக்குனர், மாடல் அழகிகள் உள்ளிட்ட 5 பேர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
 
கேரள மாநிலம், கொச்சி கடவந்திரா பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய முகமது நிசாம். பிரபல தொழிலதிபரான இவரை காவலாளியை தாக்கியது தொடர்பாக, கொச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. முகமது நிசாமின் அடுக்கு மாடி குடியிருப்பில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதும், சினிமா நடிகர், நடிகைகள், மாடல்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் இவரது அடுக்கு மாடி குடியிருப்புக்கு அடிக்கடி வந்து செல்வதும் தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து, அதிகாலையில் கொச்சி காவல்துறையினர் நிசாமின் அடுக்கு மாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர்.
 
இந்த சோதனையின்போது, அங்கு பிரபல மலையாள நடிகர் ஷைன் டோம் சாக்கோ, பெண் துணை இயக்குனர் பிளஸ்ஸி, மற்றும் மாடல் அழகிகளான ரேஷ்மா, டின்சி மற்றும் சினேகா ஆகியோர் அரைகுறை ஆடையுடன் அங்கு இருந்தனர்.
 
இந்நிலையில், அவர்களிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோகைன் என்ற போதைப் பொருள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 
 
இதையடுத்து அந்த போதைப் பொருளைக் கைப்பற்றிய காவல்துறையினர், நடிகர் ஷைன் டோம் சாக்கோ, பிளஸ்ஸி உள்ளிட்ட அந்த 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும், தொழில் அதிபர் முகமது நிசாமுக்கும் போதைப்பொருட்கள் வைத்திருந்தவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் கொச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil