Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: அதிரடி முடிவெடுத்த கேரள அரசு!!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (10:53 IST)
Corona Virus

கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் பரவி வருவதை அடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வரும் நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மூவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் கேரளாவில் அவசரநிலையை அறிவிப்பதாக தெரிவித்தார். இது ஏற்படுத்திய பெரும் பரபரப்பு அடங்குவதற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அவசரநிலையாக பிரகடனம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments