Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கை'க்கு ஓட்டு போட்டால் 'தாமரை'க்கு போகிறது: கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (10:19 IST)
கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி உள்பட 20 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக என மும்முனை போட்டி இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கை சின்னத்துக்கு வாக்களித்தால் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் தாமரை சின்னம் காட்டுவதாக கேரள காங்கிரஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
 
கொல்லம் தொகுதியில் பாலகோபால் என்பவர் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகவும், ராஜ்மோகன் உன்னிதன் என்பவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும், கே.வி.சபு என்பவர் பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

அடுத்த கட்டுரையில்
Show comments