Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்தி பிரியாணி சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (18:45 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் மாணவி ஒருவர் மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. 
 
கேரளாவில் 19 வயது மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி என்பவர் மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. காசர்கோடு என்ற பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி கடந்த மாதம் ஹோட்டல் ஒன்றில் தரமற்ற மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்தார் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
ஆனால் அந்த மாணவியின் மரணத்திற்கு காரணம் எலி விஷம் என்று தெரிய வந்துள்ளது. மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி செல்போனில் எலி விஷம் குறித்து கூகுளில் தேடி உள்ளார் என்று  தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. 
 
இதனை அடுத்து மாணவி அஞ்சு ஸ்ரீ எலி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பதுதான் உண்மை என்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments