Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சு லட்சம் பரிசா.. லாட்டரி சீட்டை கிழிச்சு போட்டுட்டேனே! – கவுண்டமணி காமெடியான ஆட்டோ டிரைவர் வாழ்க்கை!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (10:56 IST)
கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கிய ஆட்டோ டிரைவர் ஒருவர் தனக்கு அதில் பரிசு விழுந்தது தெரியாமல் கிழித்து போட்ட சம்பவம் வைரலாகி உள்ளது.

கேரளாவின் காசர்கோடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர் மன்சூர் அலி. இவர் லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இதுவரி ஒருமுறை கூட அதில் பரிசு அவருக்கு விழவில்லை. இந்நிலையில் சில நாட்கள் முன்னதாக வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் கடையில் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். ரூ.60 லட்சத்திற்கான அந்த லாட்டரியின் பரிசு விவரங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதை மேலோட்டமாக பார்த்த மன்சூர் தனக்கு பரிசு விழவில்லை என விரக்தியில் லாட்டரி சீட்டை கிழித்து போட்டுள்ளார்.

அவர் வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் அந்த கடையின் ஏஜெண்ட் அவருடைய எண்ணுக்கு ரூ.5 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறியுள்ளார். உடனே பதறி ஆட்டோ நிறுத்தத்திற்கு ஓடிய மன்சூர் கிழித்து போட்ட லாட்டரி சீட்டு துண்டுகளை சேர்த்து கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் கிழிந்த லாட்டரி சீட்டுகள் பரிசுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என்று லாட்டரி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் கவுண்டமணி பரிசு விழுந்த தனது லாட்டரி சீட்டை சவரப்பெட்டியோடு ஆற்றில் வீசிவிட்டு அழுவது போல கேரள ஆட்டோ டிரைவரின் நிலை ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் பேசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments