Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் மரணம்.. கருவில் இருந்த குழந்தையை மீட்ட மருத்துவர்கள்..!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (12:02 IST)
கேரள நடிகை ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த நிலையில் மருத்துவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவரது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றியுள்ளனர்.

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பிரியா. 35 வயது ஆன இவர் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகை பிரியாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முன்னர் காலமானார். இதையடுத்து குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து நிறைமாத கர்ப்பிணியான ப்ரியாவின் கருவில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் மீட்டனர்.

தற்போது அந்த குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments