Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேஈஈ நுழைவுத்தேர்வில் 300க்கு 300 மதிப்பெண் எடுத்த முதல் மாணவி

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (08:05 IST)
ஜேஈஈ நுழைவுத்தேர்வில் 300க்கு 300 மதிப்பெண் எடுத்த முதல் மாணவி
ஜேஈஈ தேர்வில் 300க்கு 300 மதிப்பெண் எடுத்து மாணவி ஒருவர் சாதனை புரிந்துள்ளார். இதுவரை ஜேஈஈ தேர்வில் 100 சதவீத மதிப்பெண்கள் யாருமே எடுத்ததில்லை என்ற நிலையில் டெல்லியை சேர்ந்த மாணவி ஒருவர் இந்த சாதனையை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சமீபத்தில் ஜேஈஈ நுழைவுதேர்வு நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இந்த தேர்வை எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவை ஆவலுடன் பார்த்தனர்.
 
இந்த நிலையில் ஜேஈஈ மெயின் தேர்வில் முன்னோருக்கு 300க்கு 300 மதிப்பெண் பெற்று டெல்லியை சேர்ந்த காவியா சோப்ரா என்ற மாணவி சாதனை புரிந்துள்ளார். இந்த தேர்வில் 100 சதவீத மதிப்பெண்கள் எடுத்த முதல் மாணவி இவர்தான் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே காவியா சோப்ரா கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஜேஈஈ தேர்வில் 99.9 சதவீத மதிப்பெண் பெற்றதாகவும் இருப்பினும் 100% மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மீண்டும் இந்த தேர்வை எழுதி இந்த சாதனையை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ஜேஈஈ மெயின் நுழைவுத்தேர்வில் 300-க்கும் 300 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த காவியா சோப்ராவுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments