Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் வெள்ளம்: 300 கி.மீ நீளமுள்ள ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (15:22 IST)
காஷ்மீரில் கன மழை வெள்ளப் பெருக்கு காரணமாக கடந்த 13 நாட்களாக மூடிக்கிடந்த ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் காஷ்மீரை சென்றடைய 300 கி.மீ நீளமுள்ள ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையையே பயன்படுத்த வேண்டும். ஆனால் எதிர்பாரா விதமாக காஷ்மீரில் கன மழை பெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.

இந்நிலையில் இந்த வெள்ளப் பெருக்கால் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி அதிகாலை சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள இச்சாலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. ஆதலால், இந்த நெடுஞ்சாலை கடந்த 13 நாட்களாக மூடப்பட்டிருந்தது.

ராணுவ வீரர்கள் மற்றும் பொறியாளர்கள் இச்சாலையை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஜம்மு - காஷ்மீர் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

8 நாட்களுக்கு பின் குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

Show comments