Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகையுடன் திருமணமா? - கார்த்திக் கவுடா வாக்குமூலம்

நடிகையுடன் திருமணமா? - கார்த்திக் கவுடா வாக்குமூலம்
, சனி, 13 செப்டம்பர் 2014 (12:24 IST)
பிரபல நடிகை அளித்த பாலியல் புகாரை அடுத்து மத்திய ரயில்வே அமைச்சரின் மகன் காவல் துறையினர் முன் தோன்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 மத்திய ரயில்வே சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீது நடிகை மைத்ரி, கார்த்திக் தன்னை ரகசிய திருமணம் செய்ததாகவும், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தன் தந்தையின் மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்த பொய் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கார்த்திக் கவுடா போலீசார் முன் தோன்றி,  மைத்ரியை நண்பர்கள் தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும், தான் அவருடன் நட்புடன் மட்டும் பழகிவந்ததாகவும், அவரை திருமணமோ அல்லது புகாரில் தெரிவித்தது போல பாலியல் வன்கொடுமையோ செய்யவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணைக்கு பின் கார்த்திக் கவுடா பெங்களூர் அம்பேத்கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Share this Story:

Follow Webdunia tamil