தொரத்துனா மட்டும் விட்ருவேனா..! துரத்திய கிராமத்தை தேடி 22 கி.மீ பயணித்த குரங்கு!

Webdunia
ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (12:27 IST)
கர்நாடகாவில் கிராமம் ஒன்றிலிருந்து துரத்தப்பட்ட குரங்கு ஒன்று 22 கி.மீ பயணித்து மீண்டும் கிராமத்திற்கு வந்து அட்டகாசம் செய்த சம்பவம் வைரலாகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கொட்டிகெஹரா என்ற கிராமத்தில் குரங்கு ஒன்று நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையிடம் புகார் அளித்து வந்த நிலையில் குரங்கை பிடித்த வனத்துறை அதிகாரிகள், அதை 22 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள காட்டுப்பகுதியில் விட்டு வந்துள்ளனர்.

ஆனால் 22 கி.மீ தூரம் மீண்டும் நெடும்பயணம் மேற்கொண்ட அந்த குரங்கு சரியாக மீண்டும் கொட்டிகெஹரா கிராமத்தை வந்தடைந்துள்ளது. மீண்டும் அங்குள்ள மக்களை அது தாக்கவே அதை பிடித்த வன அதிகாரிகள் மீண்டும் குரங்கு கிராமத்திற்கு வந்துவிடாதபடி அடர்ந்த கானகத்திற்குள் அதை விட்டு வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments