Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகத்தில் போராட்டம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது: மைசூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல்!

கர்நாடகத்தில் போராட்டம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது: மைசூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (19:25 IST)
உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் அதுவும் 4 வார காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டும் என்பது தான் தீர்ப்பு.


 
 
இந்த தீர்ப்பினால் தமிழகம் மகிழ்ச்சி அடைந்தாலும், கர்நாடகத்தில் நிலமை தலைகீழ்தான். ஏற்கனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு கலவரங்கள் வெடித்தன.
 
இந்நிலையில் இந்த தீர்ப்பினால் கர்நாடகத்துக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது. மண்டியாவில் முன்னாள் எம்.பி மாதே கவுடா தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
மைசூரு-பெங்களூரு நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடந்து வருகின்றன. மேலும், மைசூரில் கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடக்கிறது. குருபூரு சாந்தகுமார் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 
தற்போது கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் நாளை இந்த போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வருகின்றன.

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments