Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் லிட்டர் பாலை ஆற்றில் விட்ட வியாபாரிகள்! – கரைபுரண்டு ஓடிய பால்!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (10:45 IST)
கர்நாடகாவில் ஊரடங்கின் காரணமாக விற்க முடியாமல் போன ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை ஆற்றில் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனினும் அத்தியாவசிய கடைகள் திறக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதால் குறைவாகவே இயக்கப்படுகிறது.

உணவகங்கள், டீ கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளதால் பால் உற்பத்தியாள்கள் பாலை விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் சிக்கோடி பகுதியில் உற்பத்தி செய்த பாலை விற்க முடியாததால் சுமார் 1500 லிட்டர் பாலை ஆற்றில் ஊற்றியிருக்கிறார்கள் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் சிலர். பால் லிட்டர் 32 ரூபாய் விற்பனையாகி வரும் நிலையில் லிட்டர் 15 ரூபாய்க்கு கொடுக்க தயாராக இருந்தும் விற்க முடியாததால் ஆற்றில் ஊற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments