Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி விழாவில் பாகிஸ்தான் வாழ்க கோஷம்.. கர்நாடக கல்லூரி மாணவி மீது வழக்கு

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (15:51 IST)
கர்நாடக மாநிலத்தில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் திடீரென மாணவி ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தனியார் கல்லூரி ஒன்றில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பலரும் தங்களுக்கு பிடித்த ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்
 
அப்போது திடீரென ஒரு மாணவி எழுந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இதனை பார்த்த மாணவர் ஒருவரும் பாகிஸ்தான் ஜிந்தாபாத்  என தெரிவித்தார். இதனால் மற்ற மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இதனை அடுத்து அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாணவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாணவர் மற்றும் மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவி மற்றும் மாணவர் ஆகிய இருவரிடமும் மன்னிப்புக் கடிதம் வாங்கி அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments