Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மேகதாதுவில் அணை கட்ட அனுமதியுங்கள்’: பிரதமர் மோடியிடம் சித்தராமையா கோரிக்கை!

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2015 (15:15 IST)
டெல்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்தார். சித்தராமையாவுடன் எடியூரப்பா, அனந்தகுமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் பிரதமரை சந்திக்க சென்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
 

 
பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தருமாறு பிரதமரிடம் கோரியதாக தெரிவித்தார். தங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக மோடி பதிலளித்ததாக சித்தராமையா கூறினார். கர்நாடகா மாநிலம் காவிரியில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறிய சித்தராமையா, தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
 
மேலும் பேசிய அவர் கர்நாடகாவிற்கு உட்பட்ட பகுதியில்தான் அணைக் கட்டுவதாக விளக்கமளித்தார். தங்களது எல்லையில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அதிகாரமுள்ளதாகவும் கூறினார். அணை விவகாரத்தை தமிழக கட்சிகள் அரசியலாக்குவதாக சித்தராமையா புகார் கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments