Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநிலங்களில் இருந்து விமானம் வர தடை விதித்ததா கர்நாடகா?

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (15:37 IST)
தமிழம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்குள் விமானம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2148 ஐ தாண்டியுள்ளது. அங்கு இதுவரை 48 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அங்கு பேருந்து தொடங்குவது குறித்து முதல்வர் எடியூரப்பா அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 30 பேர்களை மட்டும் கொண்டு பேருந்துகளை இயக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்போது உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகனங்களுக்குக் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது உண்மையில்லை என அம்மாநில அரசு மறுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் இருந்து குறைவான அளவில் விமானங்கள் இயக்கவேண்டும் என்று மட்டுமே கோரிக்கை வைத்ததாகக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments