Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னட நடிகர் தர்ஷன் வீட்டில் இன்னொரு பிணம் மீட்பு.. இன்னொரு கொலையா?

Siva
புதன், 19 ஜூன் 2024 (16:52 IST)
கன்னட நடிகர் தர்ஷன் ஏற்கனவே தனது ரசிகர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பண்ணை வீட்டில் இருந்து இன்னொரு பயணம் மீட்கப்பட்டதாகவும் இதுவும் கொலையாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்த நிலையில் அந்த வீட்டில் தர்ஷனின் மேலாளர் ஸ்ரீதர் என்பவர் இறந்த நிலையில்  இருந்ததாகவும் அவர் அருகே ஒரு எலி மருந்து பாட்டில் கிடைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் எழுதிய தற்கொலை குறிப்பு ஒன்று இருப்பதாகவும் ஆனால் அதில் கையெழுத்து இல்லாமல் மை மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீதருக்கு 39 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை என்பதால் தனிமையில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்ரீதர் குடும்பத்தினர் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்றும் தர்ஷன் குடும்பத்தினர் தான் கொலை செய்துவிட்டு தற்கொலை போல் ஜோடிக்கப்பட்டு இருப்பதாகவும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் புகாரளித்துள்ளனர்.

போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஸ்ரீதர் தற்கொலைக்கும் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி கொலைக்கும் சம்பந்தம் உள்ளதா? இந்த தற்கொலைக்கு தர்ஷனுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments