Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிடி வாரண்ட் கொடுத்த நீதிமன்றத்திடமே இழப்பீடு கேட்ட நீதிபதி!

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (09:41 IST)
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பிடி வாரண்டை ஏற்க மறுத்த நீதிபதி கர்ணன், வாரண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தனக்குமன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக உச்சநீதிமன்றம் ரூ. 14 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


 

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு, உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிடி வாரண்ட் பிறப்பித்து, கடந்த மார்ச் 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

கைது வாரண்ட்டை மேற்கு வங்க காவல்துறை டிஜிபி, நீதிபதி கர்ணனிடம் நேரில் வழங்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு, உச்சநீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில காவல்துறை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்டகுழு, உச்சநீதிமன்ற வாரண்ட்டை நீதிபதி கர்ணனிடம் அளிப்பதற்காக, வெள்ளிக்கிழமையன்று அவரது இல்லத்திற்குச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து, நீதிபதி கர்ணன் வாரண்ட்டை ஏற்றுக் கொண்டதாக ஏடிஜிபி ராஜேஷ் குமார் கூறினார். ஆனால், ஏற்கனவே கூறியபடி வாரண்டை ஏற்க நீதிபதி கர்ணன் மறுத்து விட்டதாக அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதனிடையே நீதிபதி சி.எஸ்.கர்ணன் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக ரூ. 14 கோடி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments