Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குர்மித் ராம் ரஹீம் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு - பதட்டத்தில் ஹரியானா, பஞ்சாப்

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (10:40 IST)
பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங் குற்றவாளி தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் கடந்த 25ம் தேதி  கலவரத்தில் ஈடுபட்டனர்.


 


இதனால், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் கலவர பூமியாக மாறியது. அந்த கலவரம் டெல்லி மாநில எல்லைப்பகுதி வரை பரவியது.
 
ஹரியானாவில் இரண்டு ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தில் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

 
இந்நிலையில், இந்த வழக்கின் தண்டனை விவரத்தை நீதிபதி இன்று மதியம் 2.30 மணியளவில் சிறையிலேயே அறிவிக்கவுள்ளார். கும்ரீத் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளதால் அவருக்கு 7 வருட ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அவரின் ஆதரவாளர்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்