Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானுக்கு தண்டனை விதித்த நீதிபதி திடீர் இடமாற்றம்

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (10:19 IST)
மான் வேட்டை வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
சல்மான்கான், சயீப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம், சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் சிலர் கடந்த 1998ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அரிய வகை கருப்பு நிற மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளாக கழித்து நேற்று தீர்ப்பு வெளியாகியது. இந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என்றும், மற்றவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பை அளித்தார்.
 
மேலும், சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரை போலீசார் ஜோத்பூர் சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரி அவரது சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அந்த வழக்கின் தீர்ப்பை இன்று ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.
இந்நிலையில் சல்மான் கானின் ஜாமீன் மீதான மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments