Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் நகரங்களில் 5ஜி நெட்வொர்க்; ஆஃபரும் உண்டு! – ரெடியாகும் ஜியோ!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (11:37 IST)
5ஜி அலைவரிசைக்கான ஏலத்தில் ஜியோ நிறுவனம் உரிமம் பெற்றுள்ள நிலையில் 5ஜி அலைவரிசை சேவையை தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

இந்தியாவில் தற்போது 4ஜி அலைவரிசை சேவைகள் புழக்கத்தில் உள்ள நிலையில் 4ஜியை விட 10 மடங்கு இணைய வேகம் கொண்ட 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

சமீபத்தில் மத்திய அரசு 5ஜி சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலத்தில் விட்டது. இந்த ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தன.

ஏலத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் முதல் ஆளாக 5ஜி சேவையை விரிவுப்படுத்துவதற்கான வேலைகளில் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தியா முழுவதும் ஆயிரம் நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொழில்நுட்ப கருவிகள் பொருத்தும் பணியை ஜியோ விரைவில் தொடங்குகிறது.

மேலும் வாடிக்கையாளர்களை 5ஜி சேவையை நோக்கி ஈர்ப்பதற்காக சிறப்பு சலுகைகளையும் ஜியோ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments