Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் நகரங்களில் 5ஜி நெட்வொர்க்; ஆஃபரும் உண்டு! – ரெடியாகும் ஜியோ!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (11:37 IST)
5ஜி அலைவரிசைக்கான ஏலத்தில் ஜியோ நிறுவனம் உரிமம் பெற்றுள்ள நிலையில் 5ஜி அலைவரிசை சேவையை தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

இந்தியாவில் தற்போது 4ஜி அலைவரிசை சேவைகள் புழக்கத்தில் உள்ள நிலையில் 4ஜியை விட 10 மடங்கு இணைய வேகம் கொண்ட 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

சமீபத்தில் மத்திய அரசு 5ஜி சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலத்தில் விட்டது. இந்த ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தன.

ஏலத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் முதல் ஆளாக 5ஜி சேவையை விரிவுப்படுத்துவதற்கான வேலைகளில் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தியா முழுவதும் ஆயிரம் நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொழில்நுட்ப கருவிகள் பொருத்தும் பணியை ஜியோ விரைவில் தொடங்குகிறது.

மேலும் வாடிக்கையாளர்களை 5ஜி சேவையை நோக்கி ஈர்ப்பதற்காக சிறப்பு சலுகைகளையும் ஜியோ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட 10 இந்தியர்கள்.. முதலிடம் மோடி.. 3வது இடம் விஜய்..!

நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட் ஒதுக்கீடு.. அதிர்ச்சி தகவல்..!

வெனிசுலா நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம்.. 11 தீவிரவாதிகள் பலி..!

போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல்; திருவள்ளூரில் வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments