Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி இமயமலை செல்லும் நேரம் வந்தாச்சு: தனிஒருவன் ஜிக்னேஷ் மேவானி!!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (15:52 IST)
குஜராத் மாநில தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிவுகள் வெளியானது. பாஜக குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அது பாஜகவின் உண்மையான வெற்றி அல்ல. குஜராத் வாட்காம் தொகுதியில் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டார். இவர் பாஜக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை தவிர்த்து ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாக்குர் ஆகியோரும் குஜராத் தேர்தலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தினர்.
 
குஜராத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் புதிய ஆதர்ச நாயகனாக இவர் உருவெடுத்துள்ளார். தனது வெற்றி குறித்து ஜிக்னேஷ் மேவானி பின்வருமாறு பேசினார். குஜராத்தில் 150 இடங்களில் வெல்வோம் என பேசினார்கள். ஆனால் அவர்களது கனவு தகர்ந்து போனது. 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இதுதான் நடக்க போகிறது. எங்கள் இயக்கத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. 
 
இனிவரும் நாட்களில் சட்டசபையிலும் வீதிகளும் எங்களது செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும். பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு இமயமலைக்குப் போய்விட வேண்டியதுதான் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments