Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டவரா இருந்தாலும் தப்புதான்.. ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்! – ரயில்வே அதிரடி!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:14 IST)
ஜார்காண்ட் மாநிலத்தில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு ரயில்வே துறை அனுப்பியுள்ள நோட்டீஸ் வைரலாகியுள்ளது.

ஜார்காண்ட் மாநிலம் தான்பாத் ரயில் துறைக்கு சொந்தமான நிலப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பெராக்பந்த் பகுதியில் உள்ள காதிக் சமூகத்தை சேர்ந்த மக்கள் அந்த கோவிலில் வழிபட்டு வருகின்றனர். ஆனால் இந்த கோவிலுக்கு குறிப்பிட்டு உரிமை யாரிடமும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த கோவில் சட்டவிரோதமாக ரயில்வே இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக ரயில்வே துறை கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் பெறுநர் பகுதியில் ஆஞ்சநேயர் பெயரையே குறிப்பிட்டு “சட்ட விரோதமாக இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளீர்கள். 10 நாட்களில் இங்கிருந்து வெளியேறாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ள ரயில்வே துறை, அந்த நோட்டீஸை கோவில் சுவற்றில் ஒட்டியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவிலை அகற்றக்கூடாது என அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments