Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 நாட்களில் 16 பேர் பலி; ஜார்கண்டை அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (09:00 IST)
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள காட்டு பகுதியில் ஒற்றை யானை 16 பேரை கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் வனப்பகுதிகளில் புலி, யானை உள்ளிட்ட பல விலங்குகள் வசித்து வரும் நிலையில் சில சமயங்களில் அவை ஊருக்குள் புகுந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஒரு காட்டு யானை தொடர்ந்து நடமாடி வருகிறது. கடந்த 12 நாட்களாக பல்வேறு பகுதிகளில் சுற்றி திரியும் இந்த ஒற்றை காட்டு யானையால் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் யானையை கண்ட மக்கள் பலர் அதை சூழ்ந்து வேடிக்கை பார்த்தபோது அது தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானை நடமாடும் பகுதிகளில் உள்ள மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒற்றை காட்டு யானையை பிடிக்க வனத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments