Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோலுக்கு ரூ.250 வரை மானியம்! – முதல்வர் அசத்தல் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (10:54 IST)
நாடு முழுவதும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோலுக்கு மானியம் வழங்குவதாக ஜார்கண்ட் முதல்வர் அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை கடும் உயர்வை சந்தித்தது மக்களின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. பெட்ரோலை தொடர்ந்து சமையல் கேஸ் உள்ளிட்டவற்றின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பெட்ரோல் விலையில் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளார். அதன்படி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வீதம் 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments