Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல்.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
திங்கள், 6 மே 2024 (12:40 IST)
ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கிர் ஆலம் உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்படி ரூ.20 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாகவும் அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது.
 
அரசு திட்டங்களை செயல்படுத்தியதில், பணமோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலம் உதவியாளர் சஞ்சீவ் லால் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
 
இந்த சோதனையின்போது ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலம் உதவியாளர் சஞ்சீவ் லால் இல்லத்தில் உள்ள ஒரு அறையில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
இதே வழக்கில் மாநில ஊரக வளர்ச்சித்துறையின் தலைமை பொறியாளர் வீரேந்திர ராமு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments