Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1,500 கோடிய எப்ப கொடுப்பீங்க எஸ்பிஐ? நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ்

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (11:09 IST)
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால், கடந்த மாதம் எஸ்பிஐ தலைமையிலான குழு ஜெட் ஏர்வேஸ் நிர்வாக பொறுப்பை ஏற்றது. 
 
புதிய முதலீட்டாளர் கிடைக்கும் வரை நிறுவனத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.1,500 கோடியை முதலீடு செய்வதென அப்போது முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்தத் தொகை இதுவரை விடுவிக்கப்படவில்லை. 
 
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது 7 விமானங்களை மட்டுமே இயக்குகிறது. மற்ற விமானங்கள் அனைத்துமே குத்தகை பாக்கி காரணமாக தரை இறக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிறுவனத்தின் பைலட்டுகள், இன்ஜினீயர்களுக்கு 2018 டிசம்பர் வரைதான் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பிற நிலை பணியாளர்களுக்கு தற்போது மார்ச் மாத ஊதியமும் வழங்கப்படவில்லை.
 
இதனால், எஸ்பிஐ கொடுப்பதாக் சொன்ன ரூ.1,500 கோடிக்காக காத்திருக்கிறது ஜெட் ஏர்வேஸ். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments