Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீப்புக்கு தீ வைக்கும் வைரல் வீடியோ… போலீஸில் கைதான உரிமையாளர்

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (12:59 IST)
குஜராத்தில் ஜீப்புக்கு ஒருவர் தீ வைத்து கொளுத்திய டிக் டாக் வீடியோ வைரலாகிய நிலையில் அந்த ஜீப்பின் உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த இந்திரஜித் சிங் ஜடேஜா மற்றும் அவரது நண்பர் நிமேஷ் கோயல் ஆகியோர் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தபோது அந்த ஜீப் என்ஜின் கோளாறு காரணமாக சாலையின் நடுவே நின்றது. பின்பு பல முறை முயற்சி செய்து பார்த்தும் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. ஆதலால் எரிச்சல் அடைந்த ஜீப் உரிமையாளர் இந்திரஜித் அந்த ஜீப்பிற்கு தீ வைத்து கொளுத்தினார். இதனை அவரது நண்பர் நிமேஷ் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோவுடன் பஞ்சாபி பாடல் ஒன்றை இணைத்து டிக் டாக்கில் பகிர்ந்தனர். அந்த வீடியோ வைரலாகி வந்தது.

இந்நிலையில் இந்த வீடியோ போலீஸாரின் கவனத்திற்கு செல்ல, போலீஸார் இந்திரஜித் மற்றும் அவரது நண்பர் நிமேஷ் ஆகியோரின் மீது பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தற்போது விசாரணைக்கு பின் ஜாமீனில் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

Source Pehli Pass

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments