ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி என்ன?

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (17:03 IST)
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தினம் இன்று என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை சற்றுமுன் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30ஆம் தேதி அதாவது இன்று கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அவகாசத்தை நீட்டி தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 
 
ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு தமிழ் ஆங்கிலம் ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

25 ஆயிரம் பேர் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம்!.. களைகட்டும் வேலூர்!..

தமிழக பட்ஜெட் ஒரு மேனா மினுக்கி உரை!.. உருப்படியா ஒன்னுமில்ல!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments