Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கு முடிவுக்கு வந்தது - உச்ச நீதி மன்றம் உத்தரவு

Webdunia
சனி, 11 ஜூலை 2015 (00:46 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான ஜாமின் வழக்கை உச்ச நீதி மன்றம் முடித்து வைத்தது.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலருமைச்சருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
 
இதனையடுத்து, பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்திரவிட்டது.
 
சிறப்பு நீதி மன்ற தண்டனையை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார்.
 
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமின் மனு மீதான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதால், அவர்களின் ஜாமின் மனுக்கள் முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
 
ஆனால், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசும், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

பஞ்சாபியர்களை அச்சுறுத்துவதா.? அமிஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!!

திருப்பத்தூரில் விழுந்த ‘மர்மப் பொருள்’ விண்கல்லா? - விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

Show comments