Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல்

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2015 (17:51 IST)
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் இன்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்து மீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.
 

 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட கிரன் செக்டார் பகுதியில் இன்று காலை 8.20 மணியிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
 
நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள சூழலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி இருப்பது எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

Show comments