Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகை வியாபாரியை வெட்டி அவரது மனைவியை பலாத்காரம் செய்த கொள்ளையர்கள்

நகை வியாபாரியை வெட்டி அவரது மனைவியை பலாத்காரம் செய்த கொள்ளையர்கள்
, சனி, 20 செப்டம்பர் 2014 (15:40 IST)
ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நகை வியாபாரியின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த  கொள்ளையர்கள் இருவர், வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு, ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜெய்ப்பூரில் இரண்டு மாடி வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாக உள்ளே சென்ற இரு கொள்ளையர்கள், வீட்டில் இருந்த நகை வியாபாரி மற்றும் அவரது தந்தையை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
அதன்பின் வீட்டில் இருந்த 30 வயதான நகை வியாபாரியின் மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அவர்கள், நகை, பணத்தை திருடிச்  சென்றுள்ளனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
 
கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த நகை வியாபாரியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

Share this Story:

Follow Webdunia tamil