ஆர்வக்கோளாறில் வீட்டையே கொளுத்திய பொதுமக்கள்: 9 மணி அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (07:04 IST)
ஆர்வக்கோளாறில் வீட்டையே கொளுத்திய பொதுமக்கள்
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை 9 நிமிடங்களுக்கு ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானோர் பிரதமரின் கோரிக்கையை ஏற்று நேற்றிரவு இந்தியா முழுவதும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு அகல் விளக்குகள் டார்ச் லைட்டுகள் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஒரு சிலர் ஆர்வக்கோளாறில் செய்த சில விஷயங்களால் ஒரு சில விபரீதங்களும் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் என்ற பகுதியில் மொட்டை மாடியில் இருந்து கொண்டு சிலர் பட்டாசு வெடித்தனர். இதனால் அந்த வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது
 
இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சில நிமிடங்கள் கொழுந்துவிட்டு எரிந்தாலும் வீட்டில் உள்ள யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்
 
அதேபோல் இன்னும் சிலர் தீப்பந்தங்களை கையிலேந்தி தெருவில் கூட்டம் கூட்டமாக சமூகவிலகலை கூட கடைபிடிக்காமல் சென்றதும் 9 மணி விளக்கேற்று சம்பவங்களில் விரும்பத்தகாத ஒன்றாக இருந்தது. இருப்பினும் இந்த ஒரு சில சம்பவங்கள் தவிர நாடு முழுவதும் நேற்று விளக்கு ஏற்றும் நிகழ்வு மிக சிறப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments