Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணையின்போது எனது வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும்: ஜாபர் சாதிக் மனுதாக்கல்.

Mahendran
செவ்வாய், 7 மே 2024 (13:39 IST)
அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்யும்போது தனது வழக்கறிஞரையும் அனுமதிக்க வேண்டும் என டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அமலாக்கத்துறை விசாரணை நடைபெறும் போது, கேள்விகள் கேட்காத தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜாபர் சாதிக் மனுவை இன்று பிற்பகல்  விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திகார் சிறையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது.
 
இந்த  நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வழக்கறிஞரை  அனுமதிக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற ஜாபர் சாதிக் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments