Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 120 வயது பாட்டி

Webdunia
சனி, 22 மே 2021 (08:35 IST)
ஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் இருக்கும் தூது எனும் ஒரு தொலைதூர கிராமத்தில் 120 வயதாகும் தோலி தேவி எனும் மூதாட்டி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.

 
வயது குறைவாக உள்ளவர்களே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சம் நிலவும் சூழ்நிலையில் 120 வயதாகும் தோலி தேவி தடுப்பூசி எடுத்துக்கொண்டது பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைக்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
 
பிறருக்கு முன்னுதாரணமாக தோலி தேவி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக, இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டலத்தின் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி, வெள்ளியன்று மூதாட்டியின் வீட்டுக்கு சென்று, அவரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. இணையதள முகவரி இதோ..!

பிரமாண்டமாக தயாராகிறது பனகல் பார்க் மெட்ரோ.. டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு?

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments