Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி30

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி30
, திங்கள், 28 செப்டம்பர் 2015 (07:26 IST)
7 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி30 ராக்கெட்  இன்று  விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 


 
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி30 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள்கள் இன்று காலை 10 மணியளவில் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதற்கான 50 மணி நேரக் கவுண்டவுன் நேற்று தொடங்கியது.
 
இந்த ராக்கெட்டில் விண்வெளி ஆய்வுக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள ’ஆஸ்ட்ரோசாட், அமெரிக்காவின் 4 நானோ செயற்கைகோள்கள், இந்தோனேசியா, கனடா ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள் என மொத்தம் 7 செயற்கைகோள்கள்  பிஎஸ்எல்வி சி30 ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளன.
 
ராக்கெட்டில் ஒவ்வொரு கட்டமாக எரிபொருள் நிரப்பும் பணிகளும், எரியூட்டும் பணிகளும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.  நாளை விண்ணில் செலுத்தப்படும் 7 செயற்கைகோள்களில் இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பூமியில் இருந்து, 650 கி.மீ., உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
 
இந்தியா சார்பில் அண்டவெளியில் நிலைநிறுத்தப்படும் ஆஸ்ச்ரோசாட்டின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். சூரிய சூரிய குடும்பத்தை அடுத்துள்ள விண்வெளி பகுதியை அறிந்து கொள்ளவும், எக்ஸ்-ரே கதிர்களின் மூலத்தை அறிந்து கொள்ளவும் இந்த செயற்கைகோள் உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil