Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடு முழுவதும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் 15 பேர் கைது

நாடு முழுவதும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் 15 பேர் கைது

நாடு முழுவதும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் 15 பேர் கைது
, சனி, 6 பிப்ரவரி 2016 (04:15 IST)
நாடு முழுவதும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

 
உலகம் முழுவதும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பயங்கரவாத்தை ஊக்குவிக்கும் வகையில் மிகவும் ரகசியமாக செயல்பட்டு வருகிறது. இதனால், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளது.
 
குறிப்பாக, இந்த இயத்திற்கு பணம் சேர்க்கவே பல்வேறு நாடுகளில் இருந்து அப்பாவி இளைர்களை மூளைச் சலவை செய்து அவர்களுக்கு ரகசிய பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
 
இவ்வாறு ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் சுமார் 15 பேரை நாடு முழுவதும் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
டெல்லி சிறப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு மேலும் ஒருவரை கைது செய்தனர்.  இதில், இப்ராகிம் சையது (28) என்பவனை ரகசிய தகவலின் பேரில் கைது செய்த போலீசார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தியதில், இவன் இந்தியாவில் தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
 
மேலும், ஐ.எஸ். இயக்கத்தில் இவன் சே்ந்து பணியாற்ற  சிரியா செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. அவனிடம் இருந்த ரூ.85 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil