Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சரக்கு’ வாங்கறதுக்கு இவ்ளோ நேரமா ? மனைவியை ’துடிதுடிக்க ’கொன்ற கணவன்!

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (16:18 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அம்ரா மாவட்டத்திற்கு அருகே உள்ள அம்ரூட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் புர்வியா( 30). இவரது மனைவி சந்தோஷி (25). நேற்று பகல் வேளையில் அதிகமாகக் மதுகுடித்துவிட்டி வீட்டுக்கு வெளியில் தள்ளாடியபடி இருந்துள்ளார்.
இதனையடுத்து தனது மனைவியை அழைத்து தனக்கு சரக்கு வாங்கிவருமாறு மதுபான கடைக்கு அனுபியுள்ளான். சந்தோஷி கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வருவதற்கு தாமதமானதாகத் தெரிகிறது.
 
இதனால் கோபம் அடைந்த பிரவீன், சந்தோஷி வீட்டுக்குள் நுழைந்ததும் தன் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து மனைவியை தாக்கியுள்ளார். 
 
இதில், படுகாயம் அடைந்த சந்தோஷி சம்பவ இடத்திலேயே கீழே  தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலீசார் சந்தோஷியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் பிரவீனை,போலீஸார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments