Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட, 39 இந்திய தொழிலாளர்கள் உயிருடன் உள்ளனர்: சுஷ்மா சுவராஜ்

Webdunia
வெள்ளி, 15 மே 2015 (11:13 IST)
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட 39 இந்திய தொழிலாளர்கள் உயிருடன் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
 
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆண்டு மொசூல் நகரை கைப்பற்றிய போது, அங்கு இருந்து இந்திய கட்டிட தொழிலாளர்கள் 40 பேரை கடத்தி சென்றனர்.
 
அதில் ஒருவரான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் மாசி என்பவர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி இந்தியா வந்துவிட்டார்.
 
அப்போது அவர் மற்ற 39 பேரையும் தீவிரவாதிகள் கொன்று விட்டதாக கூறினார். ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதையும் இதுவரை கூறவில்லை.
 
இந்நிலையில், ஹர்ஜித் மாசி, மொகாலியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று விட்டனர்" என கூறினார்.
 
இந்நிலையில், கடத்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் டெல்லி சென்று சுஷ்மா சுவராஜை நேற்று சந்தித்துப் பேசினர்.
 
அப்போது அவர்களிடம், சுஷ்மா சுவராஜ், "எனக்கு கிடைத்த தகவல்கள்படி, 39 இந்தியர்களும் உயிரோடுதான் உள்ளனர்" என்று கூறினார்.
 
மேலும், "இந்திய தொழிலாளர்கள் பத்திரமாகவும், விரைவாகவும் மீட்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது" எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments