இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு: சபாநாயகர் உத்தரவால் குமாரசாமியின் அதிரடி!

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (20:46 IST)
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்ததாக கருதப்படுகிறது. எனவே குமாரசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்த கடந்த வாரமே கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் திங்கட்கிழமை வரை சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார். அதனையடுத்து இன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த புதன்கிழமை வரை முதல்வர் குமாரசாமி அவகாசம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சட்டசபை சபாநாயகர் திடீரென உத்தரவு பிறப்பித்தார். சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவால் காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டசபையில் கடும் அமளி செய்தனர். காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்களின் அமளியால் கர்நாடக சட்டசபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது
 
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அவர் இன்று இரவு கர்நாடகா ஆளுனர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments