Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… கண்காணிக்கும் இந்திய விமானப்படை!

Mahan Air
, திங்கள், 3 அக்டோபர் 2022 (12:42 IST)
சீனா சென்ற ஈரான் விமானம் இந்திய வான்பரப்பில் பறந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் இருந்து புறப்பட்ட மகான் ஏர் விமானம் ஒன்று சீனா நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த விமானம் இந்திய வான்பரப்பில் பறந்துக் கொண்டிருந்தபோது அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக இந்திய விமானப்படை விமானங்கள் புறப்பட்டு மகான் ஏர் விமானத்தை கண்காணித்து பின் தொடர்ந்தன. அந்த விமானத்தை தொடர்ந்து சீனாவிற்கு பயணிக்க அனுமதிக்கும்படி சீனா கேட்டுக்கொண்ட நிலையில் இந்திய ராணுவ விமானங்கள் குறிப்பிட்ட தொலைவில் விமானத்தை கண்காணித்தபடி சென்றன.

தற்போது மகான் ஏர் விமானம் பத்திரமாக இந்திய வான் எல்லையை விட்டு சீன வான் எல்லைக்குள் சென்று விட்டதாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! – பள்ளி மாணவன் பரிதாப பலி!