Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னார்வ அமைப்பின் விருதை ஏற்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா

Webdunia
ஞாயிறு, 25 மார்ச் 2018 (18:30 IST)
பெங்களூரில் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பார்ப்பன அக்ராஹர சிறையில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து நவீன வசதிகளை பெற்று வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த ஆதாரங்களை திரட்டி வெளியுலகிற்கு தெரிய வைத்தவர் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி ரூபா.

இந்த நிலையில் 'நம்ம சென்னை' என்ற பெங்களூரை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு விருது வழங்கி கெளரவிக்க விரும்பியது. இந்த தொண்டு நிறுவனம் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்படும் அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த அமைப்பின் விருதை ஏற்க மறுத்து ஐஏஎஸ் அதிகாரி ரூபா, அந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், 'இந்த விருதை ஏற்க என் மனசாட்சி இடம் தரவில்லை, ஒவ்வொரு அரசு ஊழியர்களும் நடுநிலையான சமநிலையை மட்டுமே அரசியல் அமைப்புகளிலிருந்தும், அறக்கட்டளை அமைப்புகளிடமிருந்தும் எதிர்பார்க்கின்றனர்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments