Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சூதாட்ட வழக்குகளை விசாரித்து வந்த ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை!

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (16:52 IST)
ஐபிஎல் சூதாட்டம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹிமான்ஷூராய் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக இருப்பவர் ஹிமான்ஷூராய். இவர் 2013ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட வழக்கு, பத்திரிகையாளர் கே டே கொலை வழக்கு, வழக்கறிஞர் பல்லவி கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தார்.
 
இவர் புற்றுநோய் காரணமாக நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தெற்கு மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 
 
இவரது இந்த தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் 2015ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புப்படை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட போது, மூத்த அதிகாரிகளுக்கு அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று பிரதமருக்கு கடிதம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments