Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதற்கெடுத்தாலும் தடை விதிக்கப்படுகிறது: சகிப்பின்மை குறித்து ப.சிதம்பரம் கருத்து

எதற்கெடுத்தாலும் தடை விதிக்கப்படுகிறது: சகிப்பின்மை குறித்து ப.சிதம்பரம் கருத்து
, ஞாயிறு, 29 நவம்பர் 2015 (14:34 IST)
சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எதற்கெடுத்தாலும் தடைவிதிக்கப்படுகின்றது என்று கூறியுள்ளார்.


 

 
டெல்லியில், நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
 
அப்போது இது குறித்து ப.சிதம்பரம் கூறுகையில், "நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. இது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. மரத்தடி பஞ்சாயத்துகள், ஏற்க இயலாத தீர்ப்புகளை வழங்கி வருகின்றன.
 
எதற்கெடுத்தாலும் தடை விதிக்கப்படுகிறது. ஜீன்ஸ் அணிய தடை, எழுத்தாளர்களுக்கு தடை, சாப்பிட தடை, கலைஞர்களுக்கு தடை, பயணத்துக்கு தடை, தொண்டு நிறுவனத்துக்கு தடை என்று தடை விதித்துக் கொண்டே செல்கிறார்கள்" என்று அப்போது சிதம்பரம் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil