Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று அரசு தேர்வு: இணைய சேவையை கட் செய்த மாநில அரசு..!

Siva
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (09:55 IST)
அசாம் மாநிலத்தில் இன்று அரசு தேர்வு நடைபெறுவதை அடுத்து இணையதளம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அரசு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநிலம் முழுவதும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் விதமாக மாநிலம் முழுவதும் செல்போன் தொடர்புடைய அனைத்து இணையதள சேவைகள் துண்டிக்கப்படுவதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அசாம் மாநிலத்தில் இன்று அரசு பணிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் வகையில் செல்போன் தொடர்புடைய அனைத்து இணையதள சேவைகளும் நிறுத்தப்படும்.

இந்த கட்டுப்பாடு மொபைல் போன் சேவைகளுக்கு மட்டுமே.  அதே வேளையில் தொலைபேசி இணைப்புகள் அடிப்படையில் குரல் அழைப்புகள் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் ஆகியவை வழக்கம் போல் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments